கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கி நினைக்குமாயின், ‘நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.

பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 12. நடுவு நிலைமை
குறள்: 116

மு.வரதராசனார் உரை

நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கி நினைக்குமாயின், ‘நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.

கலைஞர் உரை

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

நாமக்கல் கவிஞர் உரை

(நடுவு நிலைமை தவறக் கூடாது என்பதை ஒருவனுடைய மனச்சாட்சியே சொல்லும்.) ஒருவன் நடுவுநிலைமை தவறிப் பாரபட்சமாக ஒரு தீர்ப்புச் சொல்ல நினைக்கும்போது அவனுடைய மனச்சாட்சி நான் கெடப்போவேன் என்று எச்சரிக்கும். அதை அறிய வேண்டும்.

மணக்குடவர் உரை

தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.

பரிமேலழகர் உரை

தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை ‘யான் கெடக்கடவேன்’ என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், ‘செயின்’ என்றார்.)

English

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”

G.U. Pope’s Translation

If, right deserting, heart to evil turn, Let man impending ruin’s sign discern!

மொத்த சொற்கள்: 158

முந்தைய குறள் அடுத்த குறள்

12. நடுவு நிலைமை பிற குறள்கள்

115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.